சிறந்த எழுத்தாளர், சுதந்திர போராட்ட வீரர், தமிழிசை வளர்ச்சிக்காக
பாடுப்பட்டவர், பத்திரிக்கை ஆசிரியர் என்ற சிறப்புக்களை உடைய அமரர். கல்கி அவர்கள்
தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு இடத்தை
பிடித்து, சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் ஆவார். இவர் 1899 ஆம் ஆண்டு செப்டம்பர் 9
ஆம் நாள், தஞ்சாவூரில் பிறந்தார். 114 ஆண்டுகளுக்கு பிறகும் இவரது எழுத்துக்கள்
வாசகர் மனதில் தனி இடம் பிடித்துள்ளன. இவர் எழுதிய சிறுகதைகள், புதினங்கள்,
கட்டுரைகள், புத்தகங்கள் என அனைத்தும் புது பொளிவுடன், காலத்துக்கேற்ற
கருத்துக்களை, தமிழ் சமுதாயத்திற்கு அளித்து வருகின்றன என்று சொன்னால் மிகையாகாது.
இவர் எழுதிய பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், கல்வனின்
காதலி, தியாக பூமி, அலை ஓசை போன்ற நூல்கள் இன்று வரை வாசகர்களால் அதிக அளவில்
விரும்பி வாசிக்கப்படும் நூல்களாகும். இவரது பல நூல்களும் கட்டுரைகளும், பல்கலைக்
கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பல சிறப்புகளுக்கு
சொந்தக்காரரான அமரர் கல்கி அவர்கள், 1954 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் இயற்கை
எய்தினார். இவரது புத்தகங்கள் 1998 ஆம் ஆண்டு நாட்டுடமையாக்கப்பட்டன. இவருடைய புத்தகங்களை
படிக்க விரும்புவோர் http://www.projectmadurai.org/ என்ற
இணைய முகவரியில் சென்று பயன்பெறலாம்.
“கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” விழியாயிருந்து வழிக்காட்டி வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி
திங்கள், 9 செப்டம்பர், 2013
சனி, 7 செப்டம்பர், 2013
உலக எழுத்தறிவு தினம்
'அன்ன சத்திரம் ஆயிரம்
வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள
தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'
எழுத்தறிவின்மையை போக்கும் பொருட்டு,, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்
எட்டாம் தேதி, உலக எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகிறது. அனைவரும் எழுத்தறிவு பெற
வேண்டும் என்ற நோக்கில், 1965 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நான், யுனெஸ்கோ நிறுவனம்,
செப்டம்பர் எட்டாம் தேதியை உலக எழுத்தறிவு நாளாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து,
1966 ஆம் ஆண்டு முதல் உலக எழுத்தறிவு தினம், அனைத்து நாட்டு மக்களாலும்
கொண்டாடப்பட்டு வறுகிறது.உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் எழுத்தறிவு பெறுதலின் அவசியத்தினை
உணர்த்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
உலகில் உள்ள ஒவொரு நாடும் தனது நாட்டில் எழுத்தறிவில்லாத
அனைவரும் எழுத்தறிவு பெறும் வகையில், முதியோர் கல்வி, இரவு பள்ளி, அறிவொளி
இயக்கம், கட்டாய அடிப்படைக் கல்வி போன்ற பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது.
மேதகு முன்னால் குடியரசு தலைவர், அப்துல்கலாம் ஐயா அவர்கள்
சொன்னது போல, நாம் ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து பேருக்காவது எழுத்தறிவித்தால்,
நாட்டில் எழுத்தறிவின்மை என்பதே இருக்காது. எனவே, இன்நன் நாளில் கூடுமான வரை குறைந்த
பட்சம் எழுத்தறிவில்லாத ஐந்து பேருக்காவது எழுத்தறிவின் அவசியத்தை உணர்த்தி,
கற்பிக்க உறுதி எடுப்போம்.
புதன், 4 செப்டம்பர், 2013
ஆசிரியர் தினம்
நமது நாட்டில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு
ஆண்டும், டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின்
பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். தத்துவ மேதை டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம்
நாள் திருத்தனியில் பிறந்தார். பெற்றோர் சர்வபள்ளி வீராசாமி சீதம்மா.
சிறுவயதிலேயே
கற்பதில் மிகுந்த நாட்டம் கொண்ட இவர்,தத்துவயியல் பாடத்தை தனது விருப்ப பாடமாக
தெரிவு செய்து படித்தார். பின்பு பல தத்துவ நூல்களை முயன்று கற்றார். உலகிலேயே
மிகப்பெரிய தத்துவ மேதையாக திகழ்ந்தார். ஆசிரியர் பணியை தெரிவு செய்து, சென்னை
மாநிலக் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் பேராசிரியராகவும், பல்கலைக் கழக
துணைவேந்தராகவும் பணி புரிந்து, ஆசிரியர் பணிக்கு பெருமை சேர்த்துள்ளார். 1948 ஆம்
ஆண்டு பல்கலைக் கழக குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது பரிந்துரைகள் இந்திய
கல்வி முன்னேற்றத்திற்கு வழி வகை செய்தன. 1952 முதல் 1962 வரை, முதல் இந்திய
குடியரசுத் துணை தலைவராக இருந்தார். 1962 முதல் 1967 வரை, இரண்டாவது இந்திய
குடியரசு தலைவராக இருந்தார். இவருக்கு 1954 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இத்தனை சிறப்பிற்குரிய இவர், 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் நாள், தனது 86 ஆவது
வயதில் இயற்கை எய்தினார்.
ஆசிரியர்களுக்கு
இருக்க வேண்டிய ஒழுக்கம், நன் நடத்தை, பொருமை, சகிப்பு தன்மை, பணிவு, நுனுக்கமான
அறிவு, எளிய முறையில் கற்பிக்கும் திறம் என அத்தனை தகுதிகளையும் தன்னகத்தே கொண்டு
வாழ்ந்தமையால், இவரது பிறந்த நாள் ஆசிரியர் தினமாக அனைவராலும் மதித்து
போற்றப்படுகிறது. இன்நன் நாளில் ஆசிரியர்களும், ஆசிரியராக பணிபுரிய காத்திருக்கும்
ஒவ்வொருவரும், தனது தனிப்பட்ட திறன்களையும், அறிவையும் மதிப்பிட்டு மேம்படுத்திக்கொள்வது
அவசியமாகும். வேகமாக வளர்ந்து வரும் இந்த கணினிமயமான உலகில், ஆசிரியர்
ஒவ்வொருவருக்கும் அறிவுத் தேடல் இருந்துக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு
செயல்பட்டால் மட்டுமே இன்றைய அறிவார்ந்த மாணவர்களுக்கு, தெளிவாக கற்பிக்க இயலும்.
அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்
தின நல் வாழ்த்துக்கள்
திங்கள், 26 ஆகஸ்ட், 2013
தமிழ்த் தென்றல் திரு.வி.க
தமிழ்த் தென்றல் திரு.வி.க
அவர்களுக்கு இன்று பிறந்த நாள். 1883-ஆம்
ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 26-ஆம் தேதி பிறந்தார். தந்தையார்
பெயர் விருத்தாசலம்; தாயார் பெயர் சின்னம்மாள். இவருக்கு
பெற்றோர் இட்ட பெயர் கல்யாணசுந்தரம். இவர் பங்காற்றிய துறைகள் பல. எழுத்தாளர்,
பள்ளியாசிரியர், பத்திரிக்கை ஆசிரியர்,
தொழிற்சங்கத் தலைவர், தேசபக்தர், தேசத்தொண்டர்,
பேச்சாளர், கவிஞர், சமூகச்
சீர்திருத்தவாதி, பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுப்பட்டவர்
என்ற பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும், எளிமையாக வாழ்ந்தவர். இவரது
மொழி நடை பாமரரும் எளிதில் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு எளிய நடையில் இருந்தது.
தமிழ் மொழி உரைநடை வளர்ச்சியில் இவரது பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இவருடைய
பிறந்த நாளான இன்று மிகவும் சிறப்பிற்குரிய நாளாகும். இன்நன் நாளில் தமிழ்
மொழிக்காக நாம் என்ன செய்தோம், என்ன செய்யப் போகிறோம் என்று சற்றேனும் சிந்தித்து
பார்க்க வேண்டும்.
சனி, 3 ஆகஸ்ட், 2013
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
நாம் கொண்டாடும் ஒவ்வொரு தினத்திற்கும் ஒரு
வரலாறு உள்ளதை அறிவோம். அதுபோல் நண்பர்கள் தினத்திற்கும் ஒரு காரணம் இருக்க
வேண்டும், அது என்னவாக இருக்கும் என்பதை இனி காண்போம்.
1935ஆம்
ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றம் நட்பு தினம் குறித்து ஒரு தீர்மாணத்தை கொண்டுவந்தது.
அதில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக் கிழமை நண்பர்கள் தினமாக
அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகெங்கும் நண்பர்கள் தினம்
கொண்டாடப்படுகிறது.
குறள் 783:
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம்
தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.
Learned scroll the more you ponder, Sweeter grows the mental food;
So
the heart by use grows fonder, Bound in friendship with the good.
Like learning, the friendship of the noble,
the more it is cultivated, the
more
delightful does it become.
குறள் 784:
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர்
சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து
செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.
Nor
for laughter only friendship all the pleasant day,
But
for strokes of sharp reproving, when from right you stray.
Friendship is to be practised not for the
purpose of laughing but for that of being beforehand in giving one another
sharp rebukes in case of transgression.
claim for it.
குறள் 786:
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும்
மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.
Not
the face's smile of welcome shows the friend sincere,
But the heart's rejoicing gladness when the
friend is near.
The love that dwells (merely in the smiles of
the face is not friendship;
(but)
that which dwells deep in the smiles of the heart is true friendship.
அனைவருக்கும் இனிய
நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)