திங்கள், 26 ஆகஸ்ட், 2013

தமிழ்த் தென்றல் திரு.வி.க

தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்களுக்கு இன்று பிறந்த நாள். 1883-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 26-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் பெயர் விருத்தாசலம்; தாயார் பெயர் சின்னம்மாள். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் கல்யாணசுந்தரம். இவர் பங்காற்றிய துறைகள் பல. எழுத்தாளர், பள்ளியாசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், தொழிற்சங்கத் தலைவர்,  தேசபக்தர், தேசத்தொண்டர், பேச்சாளர், கவிஞர், சமூகச் சீர்திருத்தவாதி, பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுப்பட்டவர் என்ற பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும், எளிமையாக வாழ்ந்தவர். இவரது மொழி நடை பாமரரும் எளிதில் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு எளிய நடையில் இருந்தது. தமிழ் மொழி உரைநடை வளர்ச்சியில் இவரது பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இவருடைய பிறந்த நாளான இன்று மிகவும் சிறப்பிற்குரிய நாளாகும். இன்நன் நாளில் தமிழ் மொழிக்காக நாம் என்ன செய்தோம், என்ன செய்யப் போகிறோம் என்று சற்றேனும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக