திங்கள், 24 ஜூன், 2019

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (PGTRB) பணி இடங்களில் பார்வையற்றோர் மற்றும் குறைப் பார்வையுடையோருக்கான ஒரு சதவிகித இட ஒதுக்கீட்டு (a) Blindness and Low vision – 1% Reservation விவரம்


முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களில் பார்வையற்றோர் மற்றும் குறைப் பார்வையுடையோருக்கான ஒரு சதவிகித இட ஒதுக்கீட்டு (a) Blindness and Low vision – 1% Reservation விவரம்


முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களில் பார்வையற்றோருக்கு எந்தெந்த பாடங்களில் எவ்வளவு பணி இடங்கள் உள்ளன என்பதை அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள  அறிவிப்பின்படி, நமக்கான பணி இடங்கள் குறித்த எனது புரிதலில் பணி இடங்களைப் பட்டியலிட்டுள்ளேன். பிழைகள் இருப்பின் சுட்டுங்கள் அறிந்துக்கொள்ள ஆர்வமுடன் இருக்கிறேன்.

பின்னடைவு காலி பணி இடங்கள் 336.


பார்வையற்றோர் மற்றும் குறைப் பார்வையுடையோருக்கான பின்னடைவு காலி பணி இடங்கள் 10.

விவரம் பின்வருமாறு.

Gt  தமிழ் 3.

Gt ஆங்கிலம் 2.

Gt பொருளியல் 5.

தற்போதய பணி இடங்களில் ஊனமுற்றோருக்கான பணி இடங்கள் 134.


பார்வையற்றோர் மற்றும் குறைப் பார்வையுடையோருக்கான பணி இடங்கள் 35.

விவரம் பின்வருமாறு.

பாடவாரியாக மொத்த பணி இடமும், பார்வையற்றோருக்கான பணி இடமும் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பாடத்தில் எந்த பிரிவினருக்கு எத்தனை பணி இடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்   245. -  5.


Gtw 1.

Bc 1.

Mbc /dnc 1.

Sc 1.

St 1.

ஆங்கிலம் 206 -  4.


Gt 1.

Bcw 2.

Mbc/dnc 1.

கணிதம் 266 3.


Gt 1.

Bcw 1.

Mbc/dnc 1.

இயற்பியல் 190 -  4.


Bcw 1.

Bc 1.

Sc 1.

Scw 1.

வேதியியல். 215 4.


Bcw 1.

Bc 1.

Sc 1.

Scw 1.

தாவரவியல் 142 2.


Bc 1.

Mbc/dnc w 1.

விலங்கியல் 135 2.


Bc 1.

Mbc/dnc w 1.

வரலாறு 51 2.


Bc 1.

Mbc/dnc w 1.

பொருளியல் 98 4.


Gt 1.

Bc 2.

Scw 1.

வணிகவியல் 83 4.


Gt 1.

Bc 1.

Sc 1.

Scw 1.

உடற்கல்வி 14 1.


Mbc/dnc 1.

மொத்தம் 35


மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களில் ஏதேனும் பிழை இருப்பின் பொருத்தருள வேண்டுகிறேன். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், நான்கு சதவிகித இட ஒதுக்கீடு மற்றும் அடையாளம் காணப்பட்ட பணி இடங்கள் போன்றவற்றை பின்பற்றி இருப்பதை அறிய முடிகிறது. அதே நேரத்தில் இட ஒதுக்கீடு மற்றும் அடையாளம் காணப்பட்ட பணி இடங்கள் முறையாக கையாளப்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது நம் அமைப்புகளின் கடமை.

நன்றி.

 

வெள்ளி, 22 மார்ச், 2019

பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினி பயிலரங்கம் மே 2019


பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினி பயிலரங்கம்

22/05/2019 – 26/05/2019
அறிவிப்பை முழுமையாக படித்தபின் பதிவு செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
முதலில் பதிவு செய்யும் 50 பங்கேற்பாளர்கள் மட்டுமே பங்கேற்க இயலும்.
பதிவு செய்ய கடைசி நாள்: 05/05/2019.
அன்புடையீர்,
அரிமா சங்கங்கள் மற்றும்  ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன் பார்வையற்றோர் நலனில் ஈடுபாடுடைய சிறந்த கல்வி நிறுவனத்தோடு இணைந்து நடத்தும், பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினிப் பயிலரங்கம் 22/05/2019 புதன் முதல் 26/05/2019 ஞாயிறு வரை நடைபெற உள்ளது. தங்குமிடம் உணவு உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் செய்துத்தரப்படும். பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கட்டாயமாக மடிக்கணினி, சார்ஜர், இண்டர்நெட் மோடம், ஹெட்ஃபோன்  போன்றவற்றை கொண்டுவர வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், தங்களது பெயர், பணி அல்லது கல்வி விவரம்,, தாங்கள் பயன்படுத்தும் திரைவாசிப்பு மென்பொருள் (NVDA Or JAWS) எது, கீழேக்  குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளில் தாங்கள் எந்த பிரிவில் பயிற்சி பெற விரும்புகிறீர்கள் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களை வரும் 05/05/2019 ஞாயிற்றுக் கிழமைக்குள் திரு. ராமராஜ் அவர்களிடம்  தெரிவித்து, பதிவுக் கட்டணம் ரூபாய் 200  செலுத்தி  தங்கள் வரவை உறுதி செய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.  முதலில் பதிவு செய்யும் 50  நபர்கள் மட்டுமே பங்கேற்க இயலும். எனவே தயவுக்கூர்ந்து தாங்கள் பங்கேற்க இயலுமா என்பதை உறுதி செய்தபிறகு பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பிரிவுகள்

1.கணினி அறிமுகம், தட்டச்சு உள்ளிட்ட அடிப்படைப்  பயிற்சி, மைக்ரோசாஃப்ட் வேட் மற்றும் இணையம் அறிமுகம்.
2.பயன்பாட்டு நோக்கில் மைக்ரோசாஃப்ட் வேட், மைக்ரோசாஃப்ட் எக்சல்  மற்றும் இணையம்.
3கூடுதல் பயன்பாட்டாளர்களுக்கான பிரிவு.
1.கணினி மேலான்மை.
2.மென்பொருள் நிறுவுதல் நீக்குதல் மற்றும் இயக்குதளம் (OS) நிறுவுதல்.
3.கொக்கோஃபிக்ஸ் லினக்ஸ் பயன்பாடு அறிமுகம்.
4.ஆடியோ எடிட்டிங்.
5.வீடியோ எடிட்டிங் அறிமுகம்.
6.தமிழ் மற்றும் ஆங்கில ஒளிவழி எழுத்துணரி (OCR).
7.HTML உருவாக்குதல்.
8.சொந்தமாக வலைப்பக்கம் உருவாக்குதல்.
9.கூகுல் விண்ணப்பம் மற்றும் வினா நிரல் உருவாக்குதல்.
10.ஆண்டிராய்டு குறுஞ்செயலி உருவாக்குதல் அறிமுகம்.
11.ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்துதல்.

அனைத்து பிரிவினருக்கும் ஆண்டிராய்டு பயன்பாடு தேவைக்கேற்ப இடையிடையே பயிற்றுவிக்கப்படும்.

வகுப்பு நடைபெறும் முறை

·         குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பிரிவினருக்கும் தனி வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.
·         பிரிவு மூன்று தவிற மற்ற பிரிவினருக்கு தனித்தனி பயிற்றுநர்கள் அமர்த்தப்படுவர்.
·         தேவைப்பட்டால் தலைப்பிற்கேற்ப பொது வகுப்புகள் ஏற்படுத்தப்படும்.
·         வகுப்புகள் காலை 09.00 மணி முதல் 01.00 மணி வரையிலும் மீண்டும் 03.00 மணி முதல் 06.30 மணி வரையிலும் நடைபெறும்.
·         கோடைக்காலம் என்பதால் உணவு இடை வேளைக்கு பிறகு ஓய்வு நேரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
·         காலை மற்றும் மாலை வகுப்புகளுக்கிடையே தேநீர் இடை வேளை வழங்கப்படும்.

பயிற்சி விதிமுறைகள்

·         அனைவரும் கட்டாயம் மடிக்கணினி சார்ஜர், ஹெட்போன், இண்டர்நெட் மோடம் கொண்டுவர  வேண்டும்.
·         ஏற்கனவே பங்கேற்றவர்கள் அதே பிரிவில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
·         கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற பயிலரங்கங்களில் பங்கேற்றவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள அடுத்த நிலையிலான பிரிவுகளில் பங்கேற்களாம்.
·         பிரிவு 2 மற்றும் பிரிவு  3இல் கலந்துக்கொள்பவர்களுக்கு கணினியைத் திரைவாசிப்பு மென்பொருள் மூலம் நன்கு பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
·         பிரிவு மூன்றில் பங்கேற்பவர்கள் கூடுதல் பயன்பாட்டாளர்களாக கருதப்படுவர். அவர்களுக்கென்று தனி பயிற்றுநர் அமர்த்தப்படமாட்டாது. ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒவ்வொரு பயிற்றுநர் வந்து கருத்துக்களைப் பகிர்ந்து செல்வர்.

பதிவு செய்பவர்களின் மேலான கவனத்திற்கு

பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் தங்களால் கலந்துக்கொள்ள இயலுமா என்பதை முடிவு செய்தபின் வரவை உறுதி செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கடந்த ஆண்டு பதிவு முடிந்த பிறகு பலர் கலந்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தனர் ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க இயலவில்லை. இறுதியில் பதிவு செய்த சிலர் வரவில்லை இதனால் தேவை இல்லாத குழப்பம் ஏற்படுகிறது. எனவே வரவை உறுதி செய்துக்கொண்ட பிறகு பதிவு செய்யவும். 
பங்கேற்பவர்கள் முழுமையாக ஐந்து  நாட்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். முதல் ஒரு நாள் தாமதமாக வருவதோ, இடையில் ஒரு நாள் வெளியே செல்ல அனுமதி கேட்பதோ, இறுதியில் ஒருநாளைக்கு முன்னதாக புறப்படுவதோ அனுமதிக்கப்படமாட்டாது.  
நடைபெறும் இடம்: சென்னை. மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்

பதிவிற்கு தொடர்புக்கொள்ள

திரு. ராமராஜ்
7010293340
9940418957
மேலதிக விவரங்களுக்கு
திருமதி. பத்மா ஆனந்த் – 96 00 02 68 91.
திரு. ர. ராஜா – 99 40 39 38 55.
திரு. சே. பாண்டியராஜ் – 98 41 12 91 63.
நன்றி.....