ஞாயிறு, 13 ஜூலை, 2014

லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் விஷன் (LIONS CLUB OF GOLDEN VISION)



லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் விஷன்
(LIONS CLUB OF GOLDEN VISION)
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
Duty demands no recompense; to clouds of heaven,
By men on earth, what answering gift is given?.
(குறள் 211)
என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப மழையைப்போல் கைம்மாறு கருதாமல் உதவுகின்ற ஒரு மாபெரும் அமைப்பு தான் இந்த லயன்ஸ் க்லப் என்று சொன்னால் மிகையாகாது. தற்போது இந்த லயன்ஸ் க்லபில் பார்வை மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு, லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் விஷன் என்ற  ஒரு க்லப் உருவாக்கப்பட்டுள்ளது.

லயன்ஸ் க்லப்

          1917 ஆம் ஆண்டு மெல்வின் ஜோன்ஸ் என்பவர் ஏழை மக்களுக்கு உதவும் நோக்குடன் இந்த அமைப்பை அமெரிக்காவில் தோற்றுவித்தார். தற்போது இந்த அமைப்பு 1.35 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டு, 209 நாடுகளில் தனது சேவையை விரிவுப்படுத்தியுள்ளது. 1956 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள மும்பை நகரில் பண்டோல் என்பவரால் முதன் முதலில் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 1957 ஆம் ஆண்டு சென்னை உள்ளிட்ட பல இடங்களில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. 1925 ஆம் ஆண்டு நடைப்பெற்ற அரிமா சங்க பன்னாட்டு கூட்டத்தில் ஹெலன்கெல்லர்  கலந்துக்கொண்டு உரையாற்றியுள்ளார். அவர் தனது உரையில் “நீங்கள் எத்தனையோ சேவைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டு திறம்பட செயல்பட்டு வருகிறீர்கள். இன்று முதல் பார்வைத் திறன் காக்கவும், பார்வையற்றோருடைய முன்னேற்றத்திற்கு உதவவும் வேண்டும்” என்று உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அன்று முதல் இவ்வமைப்பு பார்வைத் திறன் காத்தல், பார்வையற்றோருடைய முன்னேற்றத்திற்கு உதவுதல் என்பதை தனது முதல் பணியாக சிறம் மேற்கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சேவையில் தங்களை பெருமளவில் ஈடுபடுத்தி பல பார்வையற்றோருக்கு உதவி வரும் ஒரு கிலை அமைப்பு தான் லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் ரோசஸ் ஆகும்.

லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் ரோசஸ்

          இந்த அமைப்பு சென்னை விள்ளிவாக்கத்தில் இயங்கிவருகிறது. இது ஒரு அனைத்து மகளிர் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வமைப்பு ஏழை மக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், உடல் நலம்குன்றியவர்களுக்கும் பல வகையில் உதவி வருகின்றது. இந்த அமைப்பு பார்வையற்றோருடைய முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றி வருகிறது. கல்வி கட்டணம் செலுத்துதல், புத்தகங்கள் அளித்தல், தனிப்பட்ட திறமைகை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல், கணினி உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்த பயிற்றுவித்தல் போன்ற பல சேவைகளை செய்துள்ளது. கடந்த மே மாதம் 27 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை, பிரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன் என்ற அமைப்புடன் இணைந்து  பார்வையற்றோருக்கான 5 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும். இந்த அளவிற்கு இவ்வமைப்பு பார்வையற்றோருக்காக செயல்படுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் லயன். திருமதி. பத்மாவதி ஆனந்த் அவர்கள் ஆவார். மேலும் அவர் மூலமாக லயன். திருமதி. ராதாராணி அவர்கள், லயன். திருமதி. வசுமதிவாசன் அவர்கள் உள்ளிட்ட பலரும் பார்வையற்றோருக்காக முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர்.

லயன். திருமதி. பத்மாவதி ஆனந்த்

          லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் ரோசஸ் அமைப்பில் தலைவர் முதல் பல பொறுப்புகளை ஏற்று செயல்பட்டவர். வருடம் முழுவதும் அதாவது 365 நாளும், நாளுக்கொன்றாக சேவை புரிந்து 400 திட்டங்களுக்கு மேல் செயல்படுத்தியவர்.  கல்வி பயிலும் பார்வையற்றோருக்கும், பயின்று பணியில் உள்ள பலருக்கும் இவர் வாசிப்பாளராக இருந்து பல சேவைகளை செய்துவருகிறார். இவர் எங்களின் தாய்  என்று நாங்கள் சொன்னதை விட, இவர்கள் எனது தத்து பிள்ளைகள் என்று அனைத்து இடங்களிலும் மகிழ்வுடன் அறிவித்தவர். அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அவ்வண்ணமே நடந்துக்கொள்வார்கள். இவர்கள் வாசிப்பதை கேட்டால் படிக்க விருப்பம் இல்லாதவருக்கும் படிக்கும் ஆர்வம் ஏற்படும். இவர்களது மிகுதியான ஆர்வத்தாலும், விடா முயற்சியாலும் தோன்றியதே லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் விஷன் அமைப்பு ஆகும்.

லயல்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் விஷன்  தோன்றிய வரலாறு

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
Men who learning gain have eyes, men say;
Blockheads' faces pairs of sores display.
(குறள் 393J
கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார்.  கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.  (கலைஞர் உரை)
          திருமதி. பத்மாவதி ஆனந்த் அம்மா அவர்கள் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு பார்வையற்ற இளைஞர்களைக் கொண்டு லியோ க்லப் ஒன்றை தொடங்க ஆசைப்பட்டார்கள். ஆனால் அது சில காரணங்களால் இயலாமல் போனது. கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13, 14, 15 ஆகிய நாட்களில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகளால் பார்வையற்றோருக்கான 3 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் நடைபெற்றது. அப்பயிலரங்கத்துடைய நிறைவு விழாவிற்கு, இன்றைய லையன்ஸ் க்லப் ஆளுநர் திருமிகு. லயன். வி.எஸ்.பி. சுந்தர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அன்றைய தினம் அவர் பார்வையற்றோருடைய கல்வி தகுதி, பணி விவரம் ஆகியவற்றை கேல்விப்பட்டு மிகுந்த மகிழ்ச்சியும் வியப்பும்ம் அடைந்தார். பிறகு அந்த விழாவிலேயே பத்மா அம்மா அவர்களிடம் இவர்கள் இவ்வளவு திறமைசாளிகளாக இருக்கின்றார்களே நாம் ஏன் இவர்களைக் கொண்டு ஒரு க்லப் தொடங்கக்கூடாது? என்ற கேள்வியை முன்வைத்தார். அப்போதைக்கு அவர்கள் அவரிடம் சம்மதம் தெரிவித்தனர். பிறகு பார்வையற்ற சில நண்பர்களிடமும், கோல்டன் ரோசஸ் உறுப்பினர்களிடமும் கலந்து ஆலோசித்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பல தடைகள் ஏற்பட்ட போதும் அதனை பொருட்படுத்தாமல் வெற்றிகரமாக  13.07.2014 அன்று  லயன்ஸ் க்லப் ஆளுநர் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில், தாய்ச் சங்கமான லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் ரோசஸ் அரவணைப்பில்,  லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் விஷன் அமைப்பு  தோற்றுவிக்கப்பட்டது.

கோல்டன் விஷன் அங்கத்தினர்

          பார்வையற்றவர்களைக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட இவ்வமைப்பில், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், வங்கி பணியாளர்கள், இரயில்வே பணியாளர்கள், மத்திய மற்றும் மாநில அரசில் பணி புரியும் இதர பணியாளர்கள் இதில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். மொத்த உறுப்பினர்கள் 26 பேர் ஆவர். திரு. ர. ராஜா அவர்கள் தலைவராகவும், முனைவர். க. வேலு அவர்கள் முதல் துணை தலைவர்  மற்றும் தாளாளராகவும், திரு. சத்தியசீலன் அவர்கள் இரண்டாவது துணை தலைவராகவும், பேராசிரியர். சாந்தி அவர்கள் செயலாளராகவும், ஆசிரியர். சுரேஷ் அவர்கள் துணை செயலாளராகவும், திரு. பத்மநாபன் அவர்கள் பொருளாளராகவும், ஆசிரியர். சரஸ்வதி அவர்கள் துணை பொருளாளராகவும் பொறுப்பேற்றனர். மேலும், ஆசிரியர். இரா. பாரதிராஜா அவர்கள் உள்ளிட்ட சிலர் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டனர்.

கோல்டன் விஷன் திட்டங்கள்

          இவ்வமைப்பு பொறுப்பேற்ற உடன் பார்வையற்றோருக்கு விழியாக இருக்கும் வெண்கோளினை பத்து மாணவர்களுக்கு வழங்கியது. பிறகு கல்வி பயிலும் ஒரு மாணவருக்கு நண்கொடையாக ரூபாய் 500 வழங்கப்பட்டது. தலைவர் தனது உரையில் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். தென் இந்திய அளவில் பார்வையற்றவர்களுக்காக  கிரிக்கெட், வாலிபால், செஸ் போன்ற போட்டிகளை நடத்த உள்ளதாக அறிவித்தார். சேவைகளை கடமையாகவும், அஞ்சாமல் துணிவுடனும் செயல்படுவோம் என்று உறுதியுடன் கூறினார்.

மேற்கோள்கள்

http://www.lionsclubs.org
13.07.2014 மற்றும் அதற்கு முன்பு நடைபெற்ற லயன்ஸ் க்லப் கூட்டங்களில் பெறப்பட்ட செய்தி.
மதுரை திட்டம் நூலகத்தின் திருக்குறள் உரை.
இதில் ஏதேனும் பிழை இருப்பின் மன்னியுங்கள்
நன்றி.....

வியாழன், 10 ஜூலை, 2014

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு – மறுமதிப்பீட்டு முடிவு வெளியாகிவுள்ளது.



சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு – மறுமதிப்பீட்டு முடிவு வெளியாகிவுள்ளது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரியம் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்து முடிவினை தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.  இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துக்கொள்ளாதவர்களுக்காக வரும் 16 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழேக் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியை பார்க்கவும்.
http://trb.tn.nic.in/SPLTET%202014/10072014/msg.htm

வெள்ளி, 20 ஜூன், 2014

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!e



ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
மேலும் விவரங்களுக்கு
http://trb.tn.nic.in/SPLTET%202014/20062014/msg1.htm
--

திங்கள், 2 ஜூன், 2014

நன்றி சொல்ல வார்த்தை இல்லை



நன்றி சொல்ல வார்த்தை இல்லை
அன்புடையீர் வணக்கம்,
ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன், லயன்ஸ் & லயனஸ் க்லப் ஆஃப் கோல்டன் ரோசஸ் இணைந்து நடத்திய பார்வையற்றோருக்கான ஐந்து நாள் சிறப்பு கணினி பயிற்சி முகாம், எல்லாம் வள்ள இறைவனது அருளாலும் அனைவருடைய ஒத்துழைப்பாலும், 27, மே, 2014 அன்று தொடங்கி 31, மே, 2014 அன்று இனிதே நிறைவேறியது. இம்முகாமினை ஒருங்கிணைத்து நடத்திய திருமதி. பத்மா அம்மா அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  இப்பயிற்சி முகாம் நடைபெற இடம், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் அருமையாக ஏற்பாடு செய்து தந்த கலிகி ரங்கநாதன் மான்ட்ஃபோட் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கும், உற்ற துணையாக இருந்த திருமதி. ரேவதி அம்மா அவர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்பயிற்சி முகாமில் 50 பங்கேற்பாளர்களும், 5 முதன்மை பயிற்றுனர்களும், 5 துணை பயிற்றுனர்களும், 2 உதவிப் பயிற்றுனர்களும் பங்கேற்றனர். பங்கேற்பாளர்களை ஐந்து குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு முதன்மை பயிற்றுனரும், ஒரு துணை பயிற்றுனரும், அனைத்து குழுவிற்கும் உதவும் வகையில் இரண்டு உதவிப் பயிற்றுனர்கள் நியமிக்கப்பட்டனர். குழு மற்றும் பயிற்றுனர்கள் விவரம் பின்வருமாரு:-
1.அந்தகக்கவி குழு
முதன்மை பயிற்றுனர்
முனைவர். சே. திவாகர், M.A., Ph.D.,
துணை பயிற்றுனர்
செல்வி. சேமலா, B.A., B.Ed.,
2.கவிச்சிங்கர் குழு
முதன்மை பயிற்றுனர்
திரு. மா. நாகராஜன், M.A., M.Phil.,
துணை பயிற்றுனர்
திரு. கண்ணதாசன், M.A., B.Ed.,
3.லூயி பிரெயில் குழு
திரு. யு. மகேந்திரன், M.A., M.Phil., P.HD Scholar
துணை பயிற்றுனர்
திரு. பு. வேல்முருகன், M.A., B.Ed.,
4.ஹெலன் கெல்லர் குழு
முதன்மை பயிற்றுனர்
திரு. பாலநாகேந்திரன், IAS Aspirant
துணை பயிற்றுனர்
திரு. சரவணன், M.A., M.Ed.,
5.ஜேம்ஸ் டே மைக்கரன் குழு
முதன்மை பயிற்றுனர்
திரு. நவரசன், M.A., B.Ed.,
துணை பயிற்றுனர்
திரு. தமிழ்மணி, B.A., B.Ed.,
உதவிப் பயிற்றுனர்கள்
திரு. ரா. ராஜா, M.A., M.Ed., Ph.D Scholar
திரு. சே. பாண்டியராஜ், M.A., M.Ed., M.Phil.,
          இரவு பகல் பாராமல் பாங்குடன் பயிற்றுவித்த ஒவ்வொரு பயிற்றுனருக்கும் எங்களது உளமார்ந்த நன்றியினை உரித்தாக்கிக்கொள்கிறோம்.
          இப்பயிலரங்கில், மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், வங்கி பணியாளர்கள், பிற துறை பணியாளர்கள் என பலரும் எவ்வித ஏற்றத்தாழ்வுமின்றி மாணவர்களாகவே மாறி பயின்றனர். அப்படி முழு ஈடுப்பாட்டுடன் பங்கேற்ற ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் எங்களது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
          இந்த பயிலரங்கம் தொடக்கம் முதல் இறுதி வரை தங்குதடையின்றி நடைபெற உறுதுணையாக இருந்த ஒவ்வொரு தன்னார்வளர்களுக்கும் எங்களது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். குறிப்பாக இறைவனால் அனுப்பப்பட்ட தன்னார்வளர் கார்த்திக் அவர்களுக்கு எங்களது பணிவான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த அளவிற்கு இங்கே இவரை குறிப்பிட காரணம் பல உண்டு. காலையில் குளிப்பதற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, தண்ணீர் கொண்டு வந்து தந்தது முதல் ஒரு பங்கேற்பாளரின் அறுந்து போன காலணியை கொண்டு போய் தைத்து கொண்டு வந்தது வரை இவரது பணியை சொற்களுக்குள் அடக்க இயலாது. அவருக்கு மீண்டும் எங்களது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். பங்கேற்ற பயிற்றுனர்கள், பங்கேற்பாளர்கள் என்ற வேறுபாடின்றி அனைவரும் அனைவருக்கும் அனைத்து நிலையிலும் உதவியதை நினைத்து பார்க்கும் போது மனம் பூரிப்படைகிறது. அப்படி முழு ஈடுப்பாட்டுடன் செயல்பட்ட அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த பயிற்சி முகாமிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பங்கேற்பாளர்கள் கலந்துக்கொண்டதற்கு முதன்மை காரணம் நமது மின் குழுமங்கள் தான். தகவலை அனைவருக்கும் கொண்டு சேர்க்க உதவிய ஒவ்வொரு மின் குழுமங்களுக்கும், அதன் நெறியாளர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், சமூக வலைத்தளங்களுக்கும், அதில் இந்த செய்தியை பகிர்ந்த ஒவ்வொரு நல் உள்ளங்களுக்கும் நன்றி. இந்த பயிற்சி முகாமிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய அனைத்து கொடையாளர்களுக்கும் உளமார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த பயிற்சி முகாமில் கலந்துக்கொண்டவர்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தாலோ, மன கசப்பு ஏற்பட்டிருந்தாலோ, ஏதேனும் இடையூறு நிகழ்ந்திருந்தாலோ அதற்கு எங்களது கவணக்குறைவே காரணமாக இருக்க முடியும். எனவே, அப்படி ஏதேனும் உங்களை பாதித்திருந்தால் தயவு செய்து மன்னித்தருளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
கற்றது கையளவு கல்லாதது கணினியளவு!
நன்றி.........