ஞாயிறு, 13 ஜூலை, 2014

லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் விஷன் (LIONS CLUB OF GOLDEN VISION)



லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் விஷன்
(LIONS CLUB OF GOLDEN VISION)
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
Duty demands no recompense; to clouds of heaven,
By men on earth, what answering gift is given?.
(குறள் 211)
என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப மழையைப்போல் கைம்மாறு கருதாமல் உதவுகின்ற ஒரு மாபெரும் அமைப்பு தான் இந்த லயன்ஸ் க்லப் என்று சொன்னால் மிகையாகாது. தற்போது இந்த லயன்ஸ் க்லபில் பார்வை மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு, லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் விஷன் என்ற  ஒரு க்லப் உருவாக்கப்பட்டுள்ளது.

லயன்ஸ் க்லப்

          1917 ஆம் ஆண்டு மெல்வின் ஜோன்ஸ் என்பவர் ஏழை மக்களுக்கு உதவும் நோக்குடன் இந்த அமைப்பை அமெரிக்காவில் தோற்றுவித்தார். தற்போது இந்த அமைப்பு 1.35 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டு, 209 நாடுகளில் தனது சேவையை விரிவுப்படுத்தியுள்ளது. 1956 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள மும்பை நகரில் பண்டோல் என்பவரால் முதன் முதலில் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 1957 ஆம் ஆண்டு சென்னை உள்ளிட்ட பல இடங்களில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. 1925 ஆம் ஆண்டு நடைப்பெற்ற அரிமா சங்க பன்னாட்டு கூட்டத்தில் ஹெலன்கெல்லர்  கலந்துக்கொண்டு உரையாற்றியுள்ளார். அவர் தனது உரையில் “நீங்கள் எத்தனையோ சேவைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டு திறம்பட செயல்பட்டு வருகிறீர்கள். இன்று முதல் பார்வைத் திறன் காக்கவும், பார்வையற்றோருடைய முன்னேற்றத்திற்கு உதவவும் வேண்டும்” என்று உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அன்று முதல் இவ்வமைப்பு பார்வைத் திறன் காத்தல், பார்வையற்றோருடைய முன்னேற்றத்திற்கு உதவுதல் என்பதை தனது முதல் பணியாக சிறம் மேற்கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சேவையில் தங்களை பெருமளவில் ஈடுபடுத்தி பல பார்வையற்றோருக்கு உதவி வரும் ஒரு கிலை அமைப்பு தான் லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் ரோசஸ் ஆகும்.

லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் ரோசஸ்

          இந்த அமைப்பு சென்னை விள்ளிவாக்கத்தில் இயங்கிவருகிறது. இது ஒரு அனைத்து மகளிர் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வமைப்பு ஏழை மக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், உடல் நலம்குன்றியவர்களுக்கும் பல வகையில் உதவி வருகின்றது. இந்த அமைப்பு பார்வையற்றோருடைய முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றி வருகிறது. கல்வி கட்டணம் செலுத்துதல், புத்தகங்கள் அளித்தல், தனிப்பட்ட திறமைகை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல், கணினி உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்த பயிற்றுவித்தல் போன்ற பல சேவைகளை செய்துள்ளது. கடந்த மே மாதம் 27 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை, பிரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன் என்ற அமைப்புடன் இணைந்து  பார்வையற்றோருக்கான 5 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும். இந்த அளவிற்கு இவ்வமைப்பு பார்வையற்றோருக்காக செயல்படுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் லயன். திருமதி. பத்மாவதி ஆனந்த் அவர்கள் ஆவார். மேலும் அவர் மூலமாக லயன். திருமதி. ராதாராணி அவர்கள், லயன். திருமதி. வசுமதிவாசன் அவர்கள் உள்ளிட்ட பலரும் பார்வையற்றோருக்காக முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர்.

லயன். திருமதி. பத்மாவதி ஆனந்த்

          லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் ரோசஸ் அமைப்பில் தலைவர் முதல் பல பொறுப்புகளை ஏற்று செயல்பட்டவர். வருடம் முழுவதும் அதாவது 365 நாளும், நாளுக்கொன்றாக சேவை புரிந்து 400 திட்டங்களுக்கு மேல் செயல்படுத்தியவர்.  கல்வி பயிலும் பார்வையற்றோருக்கும், பயின்று பணியில் உள்ள பலருக்கும் இவர் வாசிப்பாளராக இருந்து பல சேவைகளை செய்துவருகிறார். இவர் எங்களின் தாய்  என்று நாங்கள் சொன்னதை விட, இவர்கள் எனது தத்து பிள்ளைகள் என்று அனைத்து இடங்களிலும் மகிழ்வுடன் அறிவித்தவர். அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அவ்வண்ணமே நடந்துக்கொள்வார்கள். இவர்கள் வாசிப்பதை கேட்டால் படிக்க விருப்பம் இல்லாதவருக்கும் படிக்கும் ஆர்வம் ஏற்படும். இவர்களது மிகுதியான ஆர்வத்தாலும், விடா முயற்சியாலும் தோன்றியதே லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் விஷன் அமைப்பு ஆகும்.

லயல்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் விஷன்  தோன்றிய வரலாறு

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
Men who learning gain have eyes, men say;
Blockheads' faces pairs of sores display.
(குறள் 393J
கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார்.  கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.  (கலைஞர் உரை)
          திருமதி. பத்மாவதி ஆனந்த் அம்மா அவர்கள் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு பார்வையற்ற இளைஞர்களைக் கொண்டு லியோ க்லப் ஒன்றை தொடங்க ஆசைப்பட்டார்கள். ஆனால் அது சில காரணங்களால் இயலாமல் போனது. கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13, 14, 15 ஆகிய நாட்களில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகளால் பார்வையற்றோருக்கான 3 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் நடைபெற்றது. அப்பயிலரங்கத்துடைய நிறைவு விழாவிற்கு, இன்றைய லையன்ஸ் க்லப் ஆளுநர் திருமிகு. லயன். வி.எஸ்.பி. சுந்தர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அன்றைய தினம் அவர் பார்வையற்றோருடைய கல்வி தகுதி, பணி விவரம் ஆகியவற்றை கேல்விப்பட்டு மிகுந்த மகிழ்ச்சியும் வியப்பும்ம் அடைந்தார். பிறகு அந்த விழாவிலேயே பத்மா அம்மா அவர்களிடம் இவர்கள் இவ்வளவு திறமைசாளிகளாக இருக்கின்றார்களே நாம் ஏன் இவர்களைக் கொண்டு ஒரு க்லப் தொடங்கக்கூடாது? என்ற கேள்வியை முன்வைத்தார். அப்போதைக்கு அவர்கள் அவரிடம் சம்மதம் தெரிவித்தனர். பிறகு பார்வையற்ற சில நண்பர்களிடமும், கோல்டன் ரோசஸ் உறுப்பினர்களிடமும் கலந்து ஆலோசித்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பல தடைகள் ஏற்பட்ட போதும் அதனை பொருட்படுத்தாமல் வெற்றிகரமாக  13.07.2014 அன்று  லயன்ஸ் க்லப் ஆளுநர் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில், தாய்ச் சங்கமான லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் ரோசஸ் அரவணைப்பில்,  லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் விஷன் அமைப்பு  தோற்றுவிக்கப்பட்டது.

கோல்டன் விஷன் அங்கத்தினர்

          பார்வையற்றவர்களைக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட இவ்வமைப்பில், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், வங்கி பணியாளர்கள், இரயில்வே பணியாளர்கள், மத்திய மற்றும் மாநில அரசில் பணி புரியும் இதர பணியாளர்கள் இதில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். மொத்த உறுப்பினர்கள் 26 பேர் ஆவர். திரு. ர. ராஜா அவர்கள் தலைவராகவும், முனைவர். க. வேலு அவர்கள் முதல் துணை தலைவர்  மற்றும் தாளாளராகவும், திரு. சத்தியசீலன் அவர்கள் இரண்டாவது துணை தலைவராகவும், பேராசிரியர். சாந்தி அவர்கள் செயலாளராகவும், ஆசிரியர். சுரேஷ் அவர்கள் துணை செயலாளராகவும், திரு. பத்மநாபன் அவர்கள் பொருளாளராகவும், ஆசிரியர். சரஸ்வதி அவர்கள் துணை பொருளாளராகவும் பொறுப்பேற்றனர். மேலும், ஆசிரியர். இரா. பாரதிராஜா அவர்கள் உள்ளிட்ட சிலர் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டனர்.

கோல்டன் விஷன் திட்டங்கள்

          இவ்வமைப்பு பொறுப்பேற்ற உடன் பார்வையற்றோருக்கு விழியாக இருக்கும் வெண்கோளினை பத்து மாணவர்களுக்கு வழங்கியது. பிறகு கல்வி பயிலும் ஒரு மாணவருக்கு நண்கொடையாக ரூபாய் 500 வழங்கப்பட்டது. தலைவர் தனது உரையில் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். தென் இந்திய அளவில் பார்வையற்றவர்களுக்காக  கிரிக்கெட், வாலிபால், செஸ் போன்ற போட்டிகளை நடத்த உள்ளதாக அறிவித்தார். சேவைகளை கடமையாகவும், அஞ்சாமல் துணிவுடனும் செயல்படுவோம் என்று உறுதியுடன் கூறினார்.

மேற்கோள்கள்

http://www.lionsclubs.org
13.07.2014 மற்றும் அதற்கு முன்பு நடைபெற்ற லயன்ஸ் க்லப் கூட்டங்களில் பெறப்பட்ட செய்தி.
மதுரை திட்டம் நூலகத்தின் திருக்குறள் உரை.
இதில் ஏதேனும் பிழை இருப்பின் மன்னியுங்கள்
நன்றி.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக