செவ்வாய், 14 அக்டோபர், 2014

வழியிலும் வாழ்விலும் விவேகமுடன் செயல்படுவோம்!



வழியிலும் வாழ்விலும் விவேகமுடன் செயல்படுவோம்!
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் நாள் உலக வெண்கோள் தினம் (World Wite Cane Day) கொண்டாடப்படுகிறது. இந்த வெண்கோள் பார்வையற்றோருக்கு விழியாய் இருந்து வழிக்காட்டுகிறது என்று சொன்னால் மிகையாகாது. பார்வையற்றோரால் காலம் காலமாக பயன்படுத்தப்படும் வெண்கோளை முறையாக வடிவமைத்தவர் திரு. ரிச்சர்ட் ஈ ஹூவர் அவர்கள் ஆவார். வெண்கோள் வளர்ச்சியில் லயன்ஸ் க்லபினுடைய பங்கு குறிப்பிடத்தக்கது. 1930 முதல் லயன்ஸ் க்லப் அங்கத்தினர் இந்த வெண்கோளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்காக பணியாற்றி வருகின்றனர் என்பதை அவர்களது சைட் ஃபஸ்ட் என்ற திட்டத்தின் கீழ் அறிய முடிகிறது. 1964 ஆம் ஆண்டு, அன்றைய அமெரிக்க அதிபர், அக்டோபர் 15 ஆம் நாளினை உலக வெண்கோள் பாதுகாப்பு நாளாக அறிவித்தார். 2011 ஆம் ஆண்டு, இன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமா, அக்டோபர் 15 ஆம் நாளினை அமெரிக்க பார்வையற்றோர் சம உரிமை நாளாக அறிவித்துள்ளார்.
இந்நாளில் தான் 1918 ஆம் ஆண்டு அனைவராலும் போற்றி வணங்கப்படும் சீர்டி சாயிபாபா அவர்கள் இறைவனடி சேர்ந்து இறைவனானார்.
இதே நாளில் தான் 1931 ஆம் ஆண்டு நம்முடைய இந்திய நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரும், இன்றைய இளைஞர்களின் இணையற்ற தலைவருமான டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்கள் பிறந்தார்.
இத்தகு சிறப்பு மிக்க நன்நாளில் வழியிலும் வாழ்விலும் விவேகமுடன் செயல்பட உறுதிகொள்வோம்!
அனைவருக்கும் இனிய உலக வெண்கோள் தின நல் வாழ்த்துக்கள்!
நன்றி.....

புதன், 1 அக்டோபர், 2014

கற்க கற்க அறிவு ஊற்றாய் பெருகும்- சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துகள்!



கற்க கற்க அறிவு ஊற்றாய் பெருகும்- சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள்!

தாயே சரஸ்வதியே!
கற்க கற்க அறிவு ஊற்றாய் பெருகும்
என்பதை எங்களுக்கு உணர்த்திடவோ
நீ கற்கும் வண்ணம் காட்சி தருகிறாய்!
அன்னையே!
அறிவார்ந்தவரானாலும் அன்றாடம்
கற்க வேண்டும் என்பதை
உன் வடிவம் கண்டு உணர்ந்தோம்அதை
உன் மைந்தன் வள்ளுவன் சொல்ல அறிந்தோம்!
பட்டம் பல படித்தும்
அறிவின் குறைவால் அல்லும் பகலும் துடித்தோம்!
கற்கும் வரம் வேண்டி உன்னை
நித்தம் நித்தம் நினைந்தோம்
உன்னையே  தஞ்சமென அன்றாடம் பணிந்தோம்!
அருளே உருவாய் ஞானமே வடிவாய் காட்சி தரும் கலைவாணியே!
உன் திருநாளாம் இன்று உன் திருவடி நோக்கி விரைந்தோம்
உன்னையே சரண் அடைந்தோம்!
விரைவாய் வருவாய் நிறைவாய் அருள்வாய் சுகபாணியே!
  தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
  கற்றனைத் தூறும் அறிவு. (குறள் 396)
  மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக்    கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும். (மு.வ உரை)
Translation:
  In sandy soil, when deep you delve, you reach the springs below;
  The more you learn, the freer streams of wisdom flow.
Explanation:
  Water will flow from a well in the sand in proportion to the depth to which it
  is dug, and knowledge will flow from a man in proportion to his learning.
அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துகள்!

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

உறவுகள் மேம்பட...



உறவுகள் மேம்பட...
நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை (Ego) விடுங்கள்
எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசுக்காக கையாண்டு (Diplomacy) விட்டுக்கொடுங்கள் (Compromise)
சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள் (Tolerance)
நான் சொன்னதே சரி செய்ததே சரி என்று (Adamant argument) வாதாடாமல் குறுகிய மனப்பான்மை (Narrow mindness) விட்டொழியுங்கள்
மற்றவர்களை விட நம்மை எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள் (Superiority complex)
அளவுக்கதிகமாய் தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள் (Over expectation)
எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்மந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள்
கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்
நமது கருத்துக்களில் உடும்புப்பிடியாக இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள் (Flexibility)
மற்றவர் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளை ஒரு போதும் தவறாக புரிந்துக்கொள்ளாதீர்கள் (Misunderstanding)
மற்றவர்களுக்குரிய மரியாதைக் காட்டவும் இனிய இதமான சொற்களை பயன்படுத்த தவறாதீர்கள் (Courtesy)
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை சொல்லக்கூட நேரம் இல்லாதது போல் நடந்துக்கொள்ளாதீர்கள்
பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்
பிரச்சணைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திராமல் தாமாகவே பேச்சை துவக்க முன் வாருங்கள்
(வேதாத்திரி மகரிஷி)

திங்கள், 1 செப்டம்பர், 2014

வாரம் ஒரு செயல்பாடு! பங்கேற்போம் பயன்பெறுவோம்!



வாரம் ஒரு செயல்பாடு! பங்கேற்போம் பயன்பெறுவோம்!
பெருந்தகையீர் வணக்கம்,
கடந்த ஒன்பது ஆண்டுகளாக பார்வையற்றோருக்காக வாசிப்பகம் நடத்துதல், கணினி பயிலரங்கங்கள் நடத்துதல், விளையாட்டு போட்டிகள் நடத்துதல் என பல செயல்பாடுகளை பார்வையற்றோருக்காக செய்து வரும் பிரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன் மற்றும் லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் ரோசஸ் அமைப்பு தற்போது மாணவர்களது வேண்டுகோளுக்கினங்க வாரம் ஒரு செயல்பாட்டினை நடத்த திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 10.00 முதல் 12.30  வரை வாசிப்பு நேரத்தின் போதே அதில் கலந்துக்கொள்ளாத மாணவர்களுக்காக ஸ்போக்கன் இங்லிஸ், கணினி தொடர்பான கலந்துரையாடல், தமிழ் மன்றம் போன்றவை நடைபெற உள்ளது.
மாதத்தின் ஒன்று மற்றும் மூன்றாவது வாரம் ஸ்போக்கன் இங்லிஸ்காகவும், இரண்டாவது வாரம் கணினி தொடர்பான கலந்துரையாடலுக்காகவும், நான்காவது வாரம் தமிழ் மன்றத்திற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளின் முதல் நிகழ்வாக வரும் ஏழாம் தேதி ஸ்போக்கன் இங்லிஸ் வகுப்பு நடைபெற உள்ளது. இந்த வகுப்புகள் அனைத்திலும் துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் விவரங்களுக்கு 9444287463 என்ற எண்ணில் திருமதி. பத்மாவதி ஆனந்த் அம்மா அவர்களை தொடர்புக்கொள்ளவும்.
இந்த மின்னஞ்சல் தொடர்பான மறுமொழிகள் இருப்பின் pandiyaraj18@gmail.com என்ற எனது தனி மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.....