வழியிலும் வாழ்விலும் விவேகமுடன் செயல்படுவோம்!
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம்
நாள் உலக வெண்கோள் தினம் (World Wite Cane Day) கொண்டாடப்படுகிறது.
இந்த வெண்கோள் பார்வையற்றோருக்கு விழியாய் இருந்து வழிக்காட்டுகிறது என்று
சொன்னால் மிகையாகாது. பார்வையற்றோரால் காலம் காலமாக பயன்படுத்தப்படும் வெண்கோளை முறையாக
வடிவமைத்தவர் திரு. ரிச்சர்ட் ஈ ஹூவர் அவர்கள் ஆவார்.
வெண்கோள் வளர்ச்சியில் லயன்ஸ் க்லபினுடைய பங்கு குறிப்பிடத்தக்கது. 1930 முதல்
லயன்ஸ் க்லப் அங்கத்தினர் இந்த வெண்கோளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்காக பணியாற்றி
வருகின்றனர் என்பதை அவர்களது சைட் ஃபஸ்ட் என்ற திட்டத்தின் கீழ் அறிய முடிகிறது. 1964
ஆம் ஆண்டு, அன்றைய அமெரிக்க அதிபர், அக்டோபர் 15 ஆம் நாளினை உலக வெண்கோள்
பாதுகாப்பு நாளாக அறிவித்தார். 2011 ஆம் ஆண்டு, இன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமா,
அக்டோபர் 15 ஆம் நாளினை அமெரிக்க பார்வையற்றோர் சம உரிமை நாளாக அறிவித்துள்ளார்.
இந்நாளில் தான் 1918 ஆம் ஆண்டு அனைவராலும்
போற்றி வணங்கப்படும் சீர்டி சாயிபாபா அவர்கள் இறைவனடி சேர்ந்து இறைவனானார்.
இதே நாளில் தான் 1931 ஆம் ஆண்டு
நம்முடைய இந்திய நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரும், இன்றைய இளைஞர்களின் இணையற்ற
தலைவருமான டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்கள் பிறந்தார்.
இத்தகு சிறப்பு மிக்க நன்நாளில் வழியிலும்
வாழ்விலும் விவேகமுடன் செயல்பட உறுதிகொள்வோம்!
அனைவருக்கும் இனிய உலக வெண்கோள் தின
நல் வாழ்த்துக்கள்!
நன்றி.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக