வியாழன், 23 அக்டோபர், 2014

கத்தி பார்வை



கத்தி பார்வை
நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்த ஓர் திரைப்படம் கத்தி. அந்த திரைப்படத்தின் மீதான எனது பார்வையை இங்கே எழுதியுள்ளேன்.

மேலை நாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை தமிழகத்தில் நிலைப்படுத்திக்கொள்வதற்காக செய்யும் முயற்சிகளும், அதற்காக விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுவதையும், நீராதாரங்களும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதையும், அதனால் பாதிக்கப்படும் விவசாயத்தையும், அதன் அவசியத்தையும், விவசாயிகளின் இன்றைய நிலையையும் அருமையாக காட்சிப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது.
தன்னுடைய விவசாய நிலத்தை பரிகொடுத்த ஒரு விவசாயி “எங்களோட அரிசிய உங்க தட்டுக்கு கொண்டுவர முடிஞ்ச எங்களால, எங்க கஷ்டத்த உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்க முடியலனு” சொல்லும் வரிகள், விவசாய நிலம் அபகரிகப்பட்டதால் வெளிநாடு சென்று துப்புறவு பணியில் ஈடுப்பட்டிருக்கும் ஒரு தொழிலாளி “நம்மல பட்டிணி போட்டவங்களுக்கு நாம சோறு போடனுமுனு” தன்னுடைய வேதணையிலும் இறக்கத்துடன் பேசும் வரிகள் அரங்கில் இருந்த அனைவரையும் ஒரு நிமிடம் சிந்திக்க வைத்தது எனலாம்.
அதிகார வர்கம் விவசாய நிலங்களை அபகரிக்க போட்டத் திட்டத்தை எதிர்த்து செய்த செயல்பாடுகளையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் ஊடகங்களிடம் கொண்டு சென்ற போது ஊடகத்தினர் காட்டிய அலட்சிய போக்கும், ஊடகங்களின் கவணம் தங்கள் கிராமத்தின் மீது திரும்ப வேண்டும் என்பதாலும், அதன் மூலம் தங்கள் கிராமத்தின் நிலை உலகிற்கு வெளிப்பட வேண்டும் என்பதாலும் மூத்த குடிமக்கள் ஆறு பேர் நூதன முறையில் மரணத்தை தேடிக்கொண்டதும், இந்த நிலத்தின் மீது ஏற்படும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் குளிர்பாணங்களை குடிப்பவர்கள் எங்கள் இரத்தத்தை குடிப்பதாக அர்த்தம் என்று கூறிவிட்டு இறந்ததும், அதன் பிறகு ஊடகங்கள் அந்த நிகழ்வில் நடந்துக்கொண்ட நிலையும் என அனைத்தும் சொல்லப்பட்ட விதம் அருமை!
படத்தில் சில காலங்களுக்கு பிறகு ஏற்பட்ட மாற்றங்களையும்,  கதாநாயகன் மூத்தக்குடி மக்களை மதிக்க வேண்டும்என்பதை வலியுறுத்திய விதமும், முதியவர்களான, பெரியார், தெரேசா, காந்தி போன்றவர்களால் செய்யப்பட்ட சாதணைகளைச் சொல்லி முதியோர்களுக்குள் போராட்டத்திற்கான  வித்தை விதைத்து ஓர் உத்வேகத்தை ஏற்படுத்திய விதமும், விவசாயம் இல்லாததால் அயல்நாடுகளுக்கு சென்று ஒப்பந்த அடிப்படையில் தங்கள் கடவுச்சீட்டு முதல் தன்மானம் வரை அனைத்தையும் ஒப்படைத்து விட்டு குடும்ப வருமையை போக்குவதற்காக உழைக்கும் உழவர்கள் பற்றியும், அதிகாரவர்கத்தின் செயல்பாட்டிற்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு நகரும் போது அவர்களால் செய்யப்பட்ட சதி வேலைகளும், தீர்ப்பு விவசாயிகளுக்கு சாதகமாக அமைய வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளும், விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தவும், விவசாயிகளின் உணர்வுகளை காக்கவும், நீராதாரங்கள் நிலைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நகர வாசிகளுக்கு உணர்த்த எடுத்த முயற்சியும், அதனால் ஏற்பட்ட போராட்டங்களும், போராட்டங்களின் போக்கு, போராட்டத்திற்குரிய வலிமையையும், பரபரப்பை ஏற்படுத்துவதில் ஊடகங்களின் நிலைப்பாட்டையும் படம் பிடித்துக்காட்டி இருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
கதாநாயகனுக்கு விருது வழங்கும் லயன்ஸ் க்லப் விழா படத்தில் ஓர் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் காட்டப்பட்டிருக்கும் நிகழ்வு லயன்ஸ் க்லப் என்றால் என்ன என்பதையும், அதன் பணி என்ன என்பதையும், லயன்ஸ் க்லப் அங்கத்தினரும், லயன்ஸ் க்லபால் உதவி பெறுவோரும் அறிந்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
நகைச்சுவை, கருத்துச்செரிவு, காதல், இனிமையான இசை என அனைவரையும் ரசிக்க வைத்த திரைப்படம். அவ்வப்போது தொடர்பில்லாத நிகழ்வுகளை வைத்திருப்பது கதையின் ஓட்டத்தை சற்று கட்டுப்படுத்தியது எனலாம்.  நீர்குழாய்க்குள் போராட்டத்தில் இருக்கும் போது கதாநாயகனுக்கு கதாநாயகி தன் தாத்தா மூலமாகவே மோதிரம் பரிசளித்து, இன்று நம்முடைய என்கேஜ்மன்ட் என்று சொல்வது போன்றவற்றை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். ஆனாலும் இப்படிப்பட்ட மாற்றங்கள் கதைக்கிடையே ரசிக்கப்படுவதால் அதுவும் ஒரு வகையில் வரவேற்கத்தக்கது.
விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் நிலத்தடி நீர் பாதுகாப்பின் அவசியத்தையும் உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும் கத்தி ஓர் வித்தியாச முயற்சி!
நன்றி.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக