திங்கள், 21 மார்ச், 2016

உலக மகளிர் தின விழாவில் தமிழக ஆளுநரிடம் விருது பெற்ற பார்வையற்ற பெண்!


உலக மகளிர் தின விழாவில் தமிழக ஆளுநரிடம் விருது பெற்ற பார்வையற்ற பெண்!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சக்தி மண்டல் சகயோக் சார்பில் மகளிர் தினம் சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் மார்ச் 8ஆம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில்  பல்துறை பெண்களுக்கு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா அவர்கள் விருது வழங்கி சிறப்பித்தார். இவ்விழாவில் பார்வையற்ற சமூகத்திற்காக பல ஆண்டுகளாக தம் பங்களிப்பைச் செவ்வனே செய்துவரும் பார்வையற்ற பெண் செல்வி. முத்துச்செல்வி  அவர்களுக்கு சிறந்த  சமூக சேவகருக்கான விருது வழங்கப்பட்டது.

இவர், பார்வையற்றோருக்கான உரிமை, பாதுகாப்பு, இட ஒதுக்கீடு என்ர பிரச்சணைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறார். பெண்ணுரிமை, பெண் முன்னேற்றம் போன்றவற்றில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளாக அகிலஇந்தியப் பார்வையற்றோர் கூட்டமைப்பின் செயலாலராக செயலாற்றி வருகிறார். இவர் மெம்மேலும் பல சாதணைகள் புரிய எல்லாம் வள்ள இறைவன் அருள்புரியட்டும். வாழ்த்துகள்!

நன்றி...

1 கருத்து:

  1. Please send your contribution articles for:International Conference - Institute of Asian Studies - on Thirukkural May 2017.Please check this web site for full information: http://www.instituteofasianstudies.com/ -- from Ram S. Riyadh Tamil Toast Masters Club -

    பதிலளிநீக்கு