திங்கள், 17 ஏப்ரல், 2017

பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினிப் பயிலரங்கம் 10/05/2017



பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினிப் பயிலரங்கம் 10/05/2017

பதிவு செய்ய கடைசி நாள் – 28.04.2017.

அன்புடையீர்,

அரிமா சங்கங்கள், ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன், மற்றும் கலிகி ரங்கநாதன் மான்ஃபோட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்தும் பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினிப் பயிலரங்கம் 10.05.2017 புதன் முதல் 14.05.2017 ஞாயிறு வரை நடைபெற உள்ளது. தங்குமிடம் உணவு உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் செய்துத்தரப்படும்.
இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கட்டாயமாக மடிக்கணினி, சார்ஜர், இண்டர்நெட் மோடம் போன்றவற்றை கொண்டுவர வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், தங்களது பெயர், பணி அல்லது கல்வி விவரம்,, தாங்கள் பயன்படுத்தும் திரைவாசிப்பு மென்பொருள் (NVDA Or JAWS) எது, கீழேக்  குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளில் தாங்கள் எந்த பிரிவில் பயிற்சி பெற விரும்புகிறீர்கள் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களை வரும் 28.04.2017 வெள்ளிக்கிழமைக்குள் திரு. ர. ராஜா  அவர்களிடம்  தெரிவித்து, பதிவுக் கட்டணம் ரூபாய் 200  செலுத்தி  தங்கள் வரவை உறுதி செய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.  திரு. ர. ராஜா அவர்களைத் தொடர்புக்கொள்ள வேண்டிய செல்பேசி எண் 99 40 39 38 55.
முதலில் பதிவு செய்யும் 50  நபர்கள் மட்டுமே பங்கேற்க இயலும். எனவே தயவுக்கூர்ந்து தாங்கள் பங்கேற்க இயலுமா என்பதை உறுதி செய்தபிறகு பதிவு செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கடந்த ஆண்டு பதிவு முடிந்த பிறகு பலர் கலந்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தனர் ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க இயலவில்லை. இறுதியில் பதிவு செய்த பதினைந்து பேர் வரவில்லை இதனால் தேவை இல்லாத குழப்பம் ஏற்படுகிறது. எனவே வரவை உறுதி செய்துக்கொண்ட பிறகு பதிவு செய்யவும்.  பங்கேற்பவர்கள் முழுமையாக ஐந்து  நாட்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். முதல் ஒரு நாள் தாமதமாக வருவதோ, இடையில் ஒரு நாள் வெளியே செல்ல அனுமதி கேட்பதோ, இறுதியில் ஒருநாளைக்கு முன்னதாக புறப்படுவதோ அனுமதிக்கப்படமாட்டாது.

பிரிவுகள்


1.கணினி அறிமுகம், தட்டச்சு உள்ளிட்ட அடிப்படைப்  பயிற்சி, மைக்ரோசாஃப்ட் வேட் மற்றும் இணையம் அறிமுகம்.
2.பயன்பாட்டு நோக்கில் மைக்ரோசாஃப்ட் வேட் மற்றும் இணையம்.
3.பயன்பாட்டு நோக்கில் மைக்ரோசாஃப்ட் எக்சல் மற்றும் இணையம்.
4. கணினி மேலான்மை, இயக்குதளம் (OS) நிறுவுதல், இதர மென்பொருள் நிறுவுதல் நீக்குதல், ஆடியோ எடிட்டிங், தமிழ் மற்றும் ஆங்கில ஒளிவழி எழுத்துணரி (OCR) பயன்படுத்துதல்,  மின் புத்தகம் உருவாக்குதல், வலைப்பக்கம் உருவாக்குதல், ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்துதல்.
அனைத்து பிரிவினருக்கும் ஆண்டிராய்டு பயன்பாடு தேவைக்கேற்ப இடையிடையே பயிற்றுவிக்கப்படும்.

வகுப்பு நடைபெறும் முறை


·         குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பிரிவினருக்கும் தனி வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.
·         பிரிவு நான்கு தவிற மற்ற பிரிவினருக்கு தனித்தனி பயிற்றுநர்கள் அமர்த்தப்படுவர்.
·         தேவைப்பட்டால் தலைப்பிற்கேற்ப பொது வகுப்புகள் ஏற்படுத்தப்படும்.
·         வகுப்புகள் காலை 09.00 மணி முதல் 01.00 மணி வரையிலும் மீண்டும் 03.30 மணி முதல் 07.00 மணி வரையிலும் நடைபெறும்.
·         கோடைக்காலம் என்பதால் உணவு இடை வேளைக்கு பிறகு ஓய்வு நேரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
·         காலை மற்றும் மாலை வகுப்புகளுக்கிடையே தேநீர் இடை வேளை வழங்கப்படும்

பயிற்சி விதிமுறைகள்


·         அனைவரும் கட்டாயம் மடிக்கணினி கொண்டுவர  வேண்டும்.
·         இண்டர்நெட் மோடம் கொண்டுவருவது நல்லது.
·         பிரிவு 2, 3, 4இல்  கலந்துக்கொள்பவர்களுக்கு கணினியைத் திரைவாசிப்பு மென்பொருள் மூலம் நன்கு பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
·         பிரிவு நான்கில் பங்கேற்பவர்கள் கூடுதல் பயன்பாட்டாளர்களாக கருதப்படுவர். அவர்களுக்கென்று தனி பயிற்றுநர் அமர்த்தப்படமாட்டாது. ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒவ்வொரு பயிற்றுநர் வந்து கருத்துக்களைப் பகிர்ந்து செல்வர்.

நாள்: 10.05.2017 முதல் 14.05.2017 வரை.
இடம்: கலிகி ரங்கநாதன் மான்ஃபோட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, பெரம்பூர், சென்னை.

மேலதிக விவரங்களுக்கு
திருமதி. பத்மா ஆனந்த் – 96 00 02 68 91.
திரு. ர. ராஜா – 99 40 39 38 55.
திரு. சே. பாண்டியராஜ் – 98 41 12 91 63.

நன்றி.....